68

உலகம் எல்லாம் விழிப்பு எய்தி விட்டது. தினம் தினம் அதிசய அற்புதங்களைக் கண்டும், அனுபவித்தும் வருகின்றோம். 3000-ஆண்டுகளாகக் கடவுள் இருக்கிறது என்றாலும், இந்த 3000- ஆண்டுகளில் கடவுள் இந்த அதிசயங்களில் ஒன்றைக் கூடக் கண்டுபிடிக்கவில்லை. இந்த மைக் - எலக்ட்ரிக் லைட்களை (மின் விளக்கு) மனிதன்தானே கண்டுபிடித்தான்?

கேட்டால் கூறுவார்கள். "எல்லாம் சும்மாவா! கடவுள் செயல்தான் - கடவுள்தான் மனிதன் மூலம் செய்தது" என்று! ஏன் இந்த 3000-ஆண்டில் அதைச் செய்தால் என்ன? இப்போது ஏன் என்று கேட்டால் நீ நாஸ்திகன் என்று கூறிவிடுவார்கள்.

-[பெரியார், 30.06.1961