67

முன்னோர் சொன்னார் என்று சொல்வது முட்டாள்தனம். அவர்கள் காட்டுமிராண்டிகள். அறிவாளிகள் என்று சொல்ல வேண்டுமானால் முன்னோர்களைவிட இன்றைய அறிவாளிகள்தான் மேல். இன்றைய அறிவாளிகளைவிட நாளை வரப்போகும் அறிவாளிகள் இன்னும் மேலானவர்களாக இருப்பார்கள். நம்முடைய பாட்டன், பூட்டன் காலத்துக்கும், இன்றைக்கும் எவ்வளவோ மாறுதல் அடைந்து இருக்கின்றோம். 2000, 3000- ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் எப்படி இருந்து இருப்பார்கள்? அது காட்டுமிராண்டிக் காலம் அல்லவா? அந்தக் காலத்து அறிவாளிகள் மூளையில் உதித்தக் கருத்துகள் இன்றைய நிலைக்கு எப்படிப் பொருந்தும்?

-[பெரியார், 02.02.1961