"மதம் இருக்க வேண்டியதுதான். சாட்சாத் இறைவனால் உண்டாக்கப்பெற்ற இந்துமதத்தின் மகத்துவமே மகத்துவம்! பார்ப்பனர்கள்தான் அவதார புருஷர்கள்,கடவுளுக்கு அடுத்தபடியான அம்சம் கொண்டவர்கள். இந்த உண்மைகளை நேற்று இரவுதான் என் கனவில் தோன்றி அம்பாள் கூறினாள்"
என்று ஒரு வார்த்தை கூறினால்போதும்! உடனே நான் 'மகாத்மா' ஆகக்கூடும்! மகாத்மாவென்ன ஈ.வெ.ராமசாமி தான் விஷ்ணுவின் 10-வது அவதாரம் என்று கூறுவர். என்னுடைய உருவப்படம் ஒவ்வொரு பார்ப்பனர் வீட்டின் முன்னிலைகளிலெல்லாம் தொங்கும். நிதம் நிதம் மலர் சூட்டி சாம்பிராணி புகைகாட்டி பால்பழம் வைத்து நைவேத்யம் செய்வார்கள். அரசாங்கமே நான் சொல்லியதைப் பார்த்து "விட்டது சனியன்" என்று நிம்மதியாக எந்தப் பித்தலாட்டத்தையும் இனிமேல் செய்யலாம் என்று திட்டமிடும்.
"ஒருவன்தான் பெரும் எதிரியாக இருந்தான்; இன்று முதல் விமோசனம் கிடைத்தது" என்றெண்ணி மகிழ்வர்.
- [பெரியார், 06.03.1955