ஆண்சாமி, பெண்சாமி, பெண்டாட்டிசாமி, தறுதலைச்சாமி, கல்லுச்சாமி, மண்ணுச்சாமி, கட்டைச்சாமி, செம்புச்சாமி, பொம்மைச்சாமி, வீட்டுச்சாமி, காட்டுச்சாமி, ஆற்றுச்சாமி, மயிலேறுஞ்சாமி, குயிலேறுஞ்சாமி, மாடேறுஞ்சாமி, ஆடேறுஞ்சாமி, எலியேறுஞ்சாமி, புலியேறுஞ்சாமி, கழுகேறுஞ்சாமி, குரங்கேறுஞ்சாமி, ஆனைமுகச்சாமி, ஆமைமுகச்சாமி, பன்றிமுகச்சாமி, பாம்புமுகச்சாமி, எலிமுகச்சாமி, புலிமுகச்சாமி, சிங்கமுகச்சாமி, சிறுத்தைமுகச்சாமி, கொல்லைப் பிடாரி, எல்லைப் பிடாரி, குழமாயி, குழந்தையாயி, அங்கம்மன், அங்காளம்மன், மூக்கம்மன், மூத்தாளம்மன், பொம்மியம்மன், வெள்ளையம்மன், ஜக்கம்மன், தீப்பம்மன், தீப்பாச்சியம்மன், சாமூண்டியம்மன், சரவேரியம்மன், வள்ளியம்மன், தெய்வானை, காமாஷி, விசாரலாட்சி, பேச்சியாயி, லட்சுமி, ஆண்டாள் முதலிய அம்மாமார்களும், சிவன், நாராயணன், பிரம்மன், முருகன், அய்யனார், ஆஞ்சிநேயர், காட்டான், மாடன், காட்டேரி, கருப்பண்ணன், முனீஸ்வரன், இருளன், பேயாண்டி, பெரியண்ணன், சின்னண்ணன், காத்தவராயன், மதுரைவீரன், வீரியன், நொண்டி, தூரி, தூண்டி, நல்லண்ணன், தொட்டியத்து சின்னான், மன்னாரு, பனைமரத்தான், நாட்ராயன் முதலிய அய்யாமார்களும், நமது நாட்டைவிட்டு என்று தொலைவார்களோ அன்றே நமது நாடு விடுதலையடையும் நிச்சயம். நிச்சயம்!
-[பெரியார், 23.06.1945, "குடிஅரசு"