36

பகுத்தறிவு என்று சொல்லுவதும்
மாறி மாறி வருவதாகும்.
இன்று நாம் எவை எவைகளை
அறிவுக்குப் பொருத்தமானவை என்று
எண்ணுகிறோமோ அவை அவை நாளைக்கு
மூடப் பழக்கங்கள் எனத் தள்ளப்படும்.
நாம் கூட பல பொருள்களை, ஏன் மகான்கள்
என்று புகழப்படுபவர்கள்! சொன்னவற்றையே
ஒதுக்கி விடுவோம். அதுப்போல் தான்
நமது பின்னோர்கள் என்னைக் குறித்துங்கூட
ஒரு காலத்தில் "ராமசாமி என்ற மூடக்
கொள்கைக்காரன் இருந்தான்" என்று கூறலாம்.
அது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி!
காலத்தின் சின்னம்.

பழைய காலத்தைச் சேர்ந்தவை
என்பதற்காக நாம் குறை கூறவில்லை.
அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி
என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும்.
சிக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை
உண்டாகக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்!"
அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்போது
மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்.
எனவே மாற்றம் இயற்கையானது.
அதைத் தடுக்க யாராலும் முடியாது.
எத்தகைய வைதீகமும் மாற்றத்திற்குள்ளாகி
தான் தீர வேண்டும்.

- பெரியார்