27

பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலே நம்பிவிடக் கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ; மந்திர சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்."
(பெரியார் , ´குடிஅரசு´ 09.12.1928)