2

திருமண முறையானது காட்டுமிராண்டிக்காலத்தில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காக கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ அது போலவே பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்!

இந்தத் திருமண முறை பெரிதும் சுயநலத்துக்காகவே ஒழிய, பொதுநலத்துக்கு அல்லவே? புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும் பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால், அவற்றை இரண்டு பேருமே சேர்த்துக் காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே ஒழிய சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை.

அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அதுபற்றிக் கவலைப் படமாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான்; ஆனால், அது அவன் வீட்டுக்குத் தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவேயாகும். ஆண்களும், பெண்களும் இத்தகைய தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல் , படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அதனை அடுத்து, புருஷன் பெண்டாட்டியாகி , தனிக்குடித்தனம், தனிச் சமையல் என்று ஆக்கிக்கொண்டு , பொதுநல உணர்ச்சி அற்றவர் களாகவே ஆகிவிடுகின்றார்கள்.