40

உன் இலக்கியத்தையே பார்த்து கிட்டே இருந்தால் நீ என்றைக்கு ஆகாயத்திலே பறக்கப் போகிறே? பறக்கிறதுக்கு எங்கே இருக்கிறது சரக்கு உன் இலக்கியத்திலே? கண்ட சரக்கு என்னான்னா - சூரியன் அங்கே ஓடினான், இங்கே ஓடினான் - அவளுக்குப் பிள்ளை கொடுத்தான், இவளுக்குப் பிள்ளை கொடுத்தான் - அவன் ஏழு குதிரையிலே போகிறான் - இந்த மாதிரி கதைதானே உனக்குத் தெரியும். அதுதான் உனக்குத் தெரிந்த இலக்கியம். இதுதான் பள்ளியிலேயும் சொல்லித்தருகிறார்கள். இதைத்தான் விரிவாக இலக்கியத்திலேயே படிக்கிறாய்.

- [பெரியார் , 05.03.1969